Tuesday 13 July, 2010

மதராசபட்டினம் - என் பார்வையில்!

படத்தின் விளம்பரங்களை பார்த்ததுமே இதை நல்லதொரு திரைஅரங்கில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன்.அப்படி தான் நேற்று இரவு PVR சென்று பார்த்தேன். PVR -இல் பார்க்கும் முதல் படமும் இதுவே :)

படக்குழுவினரின் பெயர்களை போடும் விதத்தில் இருந்த வித்தியாசம் படம் முழுவதும் இருக்கிறது! டைட்டானிக் படம் போல ஆரம்ப காட்சிகள் இருந்தாலும்,தொடர்ந்து வரும் காட்சிகள் புதுமையாகவும் அருமையாகவும் உருவாக்கபட்டுள்ளதை நம்மால் மறுக்க இயலாது!

இந்திய சுதந்திரத்துக்கு முன் ஆரம்பித்த காதல், படம் முடிந்த பின்னும் நம்மை விட்டு நீங்காத அழகிய காதல் கதையே இந்த மதராசபட்டினம்!
இளம்பரிதியாக ஆர்யா. மல்யுத்த வீரனுக்கு ஏற்ற உடல்வாகுமுகபாவம் என தன்னை இளம்பரிதியாகவே மாற்றி படம் முழுக்க கம்பீரமாக பவனி வருகிறார். ராபர்ட் எல்லிசுடன் சண்டை போடுவதாகட்டும், AMY உடன் வெகுளியாக பேசுவதாகட்டும்காட்சிக்கு ஏற்றார் போல் தன் நடிப்பு திறமையும் நிலைநிறுத்தியிருக்கிறார்! படத்திருக்கு படம் தன் நடிப்பையும்கதாபாத்திரத்தையும் வேறுபடுத்தி தன்னையும் நல்ல ஒரு நடிகன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்! 


கதைகளிலும் கற்பனையிலும் மட்டுமே வாழ்ந்து வந்த தேவதைவெள்ளித்திரைக்கு வெளிச்சமாக வந்தது மகிழ்ச்சிஅதுவும் என் தமிழ்த்திரைக்கு மின்னலாக வந்தது பேரின்பம்! ! AMY JACKSONஎன்ன ஒரு அழகு!! 

படமே ரொம்ப அழகு. அதை பேரழகாக்கிய பெரிய பங்கு AMY JACKSON உண்டு! படம் முழுக்க அம்மணி வருவதால் படம் போறதே தெரியவில்லை.. (எங்க இருந்து டா இவள புடிச்சாங்க.. இதுக்காகவே இந்த இயக்குணர பாராட்டலாம்-நு ஒரு பேச்சு இருக்கு). நம்ம ஊர் நடிகைகளை கண்டுபிடித்து நடிக்க வைப்பதே எவ்வளவு பெரிய கஷ்டம்! அதிலும் வெளிநாட்டு நடிகைதமிழில் நடிக்க வைப்பதே பெரிய ஒரு சாதனை! ராபர்ட் எல்லிசுடன் வேண்ட வெறுப்பாக நடமாடும் காட்சியும்ஆர்யா ஆங்கிலம் பேச சிரமப்படும் போது "மறந்துட்டியா" சொல்ற காட்சியும் சரிஅவ்வளவு அழகு - நடிப்பிலும் சரி, AMY ஜாக்சனும் சரி. AMY பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்!! 
படத்தின் இன்னொரு சிறப்பம்சம் நகைச்சுவை பகுதி மற்றும் நடிகர்களின் தேர்வு! ஹனீபா வரும் காட்சிகளில் திரையரங்கம் களைக்கட்டுகிறது! பாஸ்கர்,நாசர்பட்டாபிவயதான AMY JACKSON , ஜீவாஆர்யாவின் தங்கை என்ன அத்தனை நடிகர்களின் தேர்வும் கணக்கசிதம்! ஆர்யா ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் காட்சி (A.AA., B.BB, C.CC..), "குண்டு போடறாங்க..குண்டு போடறாங்க.. ", "குண்டு போடல..போடல", "ஒரு உதவி வேணும்" போன்ற காட்சிகள் நம்மை சிரிக்கவைக்காமல் போகாது! படகில் இருந்து ஆர்யாவை தள்ளி விடும் காட்சி நம்மை நெகிழவைக்கிறது!

முதல் பாதி 105 நிமிடங்கலாம்.. படம் போனதே தெரியவில்லை! கொஞ்சம் பெரிய படம் தான். இருந்தாலும் அலுப்பு தட்டாமல் படம் போகிறது! இந்த படத்திலும் தாலி செண்டிமெண்ட் இருக்கு ஆனா அதை சொன்ன விதம் பாராட்டபடவேண்டியது! படத்தில் ஒரு விடயம் மட்டும் நெருடலாக இருந்தது.. 1945 -இல் கதைக்களம் ஆரம்பிக்கிறதுஆனால்உரையாடல் (பேச்சு தமிழ்) அப்படி தான் இருந்ததா என ஒரு சின்ன சந்தேகம்! 
தொழில்நுட்பத்தில் படம் ஓங்கியே நிற்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் நம்மை அள்ளுகின்றன. காலங்களை வேறுபடுத்தி காட்டி, காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றுகிறார். அருமையாக படம் பிடித்த காட்சிகளை அற்புதமாக ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார்! பல இடங்களில் நம்மையும் அறியாமல் கைதட்டல் பெறுகிறார்!

GV பிரகாஷ் - பின்னணி இசையாகட்டும்பாடல் இசையாகட்டும்படத்தில் இன்னொரு ஹீரோ என்று கூட சொல்லலாம். தரமான படத்திற்கு முதல் தரமான இசையை தந்துள்ளார்! "பூக்கள் பூக்கும்", "வாம்மா துரையம்மா" ,"ஆருயிரே" என அத்தனை பாடல்களும் கவர்ந்தன! வாழ்த்துக்கள் GV பிரகாஷ்! 

அன்று சென்னை எப்படி இருக்கும் என்ன பல forward mail பார்த்தே ஆச்சர்யபட்ட நமக்கு வெள்ளித்திரையில் பார்க்கும் பொது அதன் இன்பம் இன்னும் அழகு தான். அந்த இன்பத்தை தந்தவர் கலை இயக்குனர் செல்வகுமார்! குறிப்பாக பக்கின்காம் கானல் (கூவம்) படகு போகும் காட்சி.. அடடே!!
கிரீடம்பொய் சொல்ல போறோம் அடுத்து விஜய் இயக்கியுள்ள திரைப்படம். இயக்கத்தில் பெரியதொரு முன்னேற்றம்! அழகான கதைதேர்ந்த திரைக்கதை,பொருத்தமான நடிகர்கள் தேர்வு! இப்படி ஒரு அழகான திரைப்படம் தர கடுமையாக உழைத்திருக்க வேண்டும்!!! அந்த உழைப்பின் வெளிப்பாடுதிரைப்படம் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் மனநிறைவும்மீண்டும் ஒரு முறை படம் பார்க்கலாமே என தோன்றுவது தான்!

மாறுபட்ட திரைப்படங்களை வழங்கி வரும் AGS நிறுவனத்தின் மற்றொரு படைப்பு,காவியம் இந்த மதராசபட்டினம் என்றே சொல்லலாம்!