Monday 28 June, 2010

களவாணி - என் பார்வையில்!!!

களவாணி - இந்த வெள்ளி தான் வெளியாகும் என்று நினைத்திருந்தேன்.. திடீர் என்று பார்த்தல் கடந்த வாரமே வெளி ஆகிற்று.. என் நண்பனின் ஊர்காரன் தான் "விமல்" என்பதால்அவன் படம் பார்க்க வேண்டும் என்று மிக துடிப்பாக இருந்தான்.. சரிபடம் விமர்சனம் தேடி பார்த்தால் ஒன்றும் தென்படவில்லை... ஜெட்லி அவர்களின் விமர்சனம் பார்த்ததும் ஒரு சின்ன மகிழ்ச்சி! நம்பிக்கையுடன் நண்பர்களுடன் woodlands symphony சென்றோம்.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை :)  நன்றி ஜெட்லி :) 
முழுக்க முழுக்க கிராமத்து மணத்துடன் இப்படி ஒரு படம் பார்த்து நிறைய நாள் ஆச்சு.. கதை என்று பார்த்தால்பெரிதாக ஒன்றும் இல்லை. ஊரில் வெட்டியாக சுற்றும் பையன் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யும் வழக்கமான காதல் கதை தான்! ஆனால் படைக்கப்பட்ட விதம்நடிகர்களை தேர்வு செய்த விதம் நம்மை படத்தோடு ஒன்ற மிகவும் உதவுகிறது!

குறிப்பாக விமல்இளவரசுசரண்யா.. இவர்கள் மூவரின் நடிப்பில் காட்சிகள் மிளிர்கின்றன.. விமலின் எதார்த்தமான நடிப்பு கிராமத்து இளவட்டமாக பொருந்திருக்கு. இவர் செய்யும் சேட்டைகள்களவானி தனம் அனைத்தும் ரசிக்க வைக்கிறது! கஞ்சா கருப்புடன் இவர்கள் சேரும் காட்சிகளில்திரையரங்கமே குலுங்குகிறது!  நண்பனின் காதலி என்று சொல்லி கொண்டு அந்த பெண்ணை தூக்கி செல்லும் போதும்வசமாக அப்பாவிடம் மாட்டும் போதும்விமல் மிளிர்கிறார்.
ஹெலன் - திரைப்படத்தின் கதாநாயகி. அடஉண்மையாகவே பள்ளிக்கூடம் போற பொண்ணு மாதிரி தான் இருக்காங்க! படத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார்! 
இளவரசு, நிறைய படங்களில் இவரை சரியாக பயன்படுத்தவில்லையே என்று நான் எண்ணியதுண்டு! ஆனால்இது விதிவிலக்கு! இளவரசு வந்ததும் படம் கலை கட்டுகிறது! இளவரசுவின் எதார்த்தமான பேச்சு அருமையாக பொருந்திருக்கு! மகனிடம் (விமல்) கோபப்படும் போதும் சரிமனைவியை (சரண்யா) பார்த்து ஒன்னும் செய்ய முடியாமல் இருக்கும்போதும் சரிரொம்ப இயல்பா நடிச்சிருக்கார்! "ஆணி போய் ஆவணி வந்தா பையான் top-la இருப்பான்னு கிராமத்து ஜோஷியார் சொல்லிருகாருல!" இப்படி பேசி பேசியே படம் முழுவதும்என்ன செய்தாலும் மகனுக்கு துணையாக இருக்கும் அம்மாவாக சரண்யா அசத்தியிருக்கிறார்!

திரைப்படம் முழுவதும் வட்டார மொழி அருமையாக பேசபட்டிருப்பதால்நம்மை சுற்றியே நிகழ்வது போல இருந்தது.

படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம்கண்டிப்பா ஐந்து பாடல் இருக்க வேண்டும் என்று இல்லாமல்படத்திற்கு தேவையான சில பாடல்களை தேர்வு செய்துஅதிலும் 1 - 2 நிமிட பாடல்களை வைத்தது!! SS குமரனின் இசைராஜ முகமதுவின் எடிட்டிங்ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலத்தை கூட்டுகிறது! நல்ல கதை-இயக்குனர்களை தட்டி கொடுத்துஇப்படி ஒரு படம் தயாரித்த நசிர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! 

படத்தின் மிக பெரிய பலமே திரைக்கதை தான். எங்காவது சோகமோஇல்லை செண்டிமெண்ட் காட்சிகள் வரப்போகிறது என்று நினைத்தால்அங்கேயும் ஒரு நகைச்சுவை திருப்பத்தை தூவி நம்மை "அட" போட வைக்கிறார்! அதையே கிளைமாக்ஸ்-ல கையாண்ட விதம் அருமை! முதல் திரைப்படத்திலயே உங்கள் முத்திரையை அழகாக அழுத்தமாக பதித்திருக்கிறீர்!

படம் முழுவதும் நல்லதொரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது!! இது இயக்குனரின் மிகப்பெரிய வெற்றி! ரொம்ப அருமையா இருந்தது படம்!! இயக்குனர் சற்குணம் அவர்களே - தொடர்ந்து இது போன்ற நல்ல திரைப்படங்களை எடுக்க நான் என் நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்!!  

Saturday 5 June, 2010

தூக்கு தண்டனை கூண்டு!

சமீபத்தில் நண்பர்களுடன் ராமேஸ்வரம்கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். அப்பொழுதுபத்மநாபபுரம் அரண்மனை செல்ல நேரிட்டது! சுமார் 5.5 ஏக்கர் நிலபரப்பில் ஒரு பிரமாண்டம்! அதில் சுமார் 3.5 ஏக்கர் நிலபரப்பில் அரண்மனை கட்டிடங்களே இருந்தது அதன் இன்னொரு சிறப்பம்சம்! இப்படி மெய்சிலிர்த்த வேலையில் இன்னொரு தகவலை அறிந்து சற்று மிரண்டே போனேன்!

தூக்கு தண்டனை கூண்டு(Capital Punishment Cage): 

இந்த புகைப்படத்தை பார்த்தால் தூக்கு தண்டனையாஎன்று யோசிக்கலாம். ஆனால், அதன் பெயர் அப்படி தான் எழுதபட்டிருந்தது. விசாரித்த போதும் அதே பதில் தான்!

கொள்ளையர்கள்கயவர்கள்கொலையாளிகளை தண்டிக்க அன்றிருந்த மன்னரால் அமைக்கப்பட்ட கூடு தான் இது. இதன் மூலம் தண்டிக்கபடும் முறை மிகவும் கொடியது.

குற்றவாளிகளின் உடைகளை அவிழ்த்துஇந்த கூட்டில் இறுக்கி அடைக்கப்படுவார்கள். இந்த கூட்டை விட்டு வெளி வர முடியாத அளவுக்கு பூட்டுகளால் நன்கு அடைக்கபட்டிருக்கும்! இப்படி பூட்டிய குற்றவாளிகளை கள்வந்தட்டு என்னும் இடத்தில சென்று,மரங்களில் தொங்க விட்டு வந்துவிடுவார்கள்! 

அப்புறம் என்னபுழுகாக்கா முதல் அணைத்து விலங்குகளின் பசிக்கு இரையாக வேண்டியது தான்! இப்படி துடிக்க துடிக்க சித்ரவதை செய்து தண்டனையை நிறைவேற்றுவார்கள்!


இன்றைய சூழலில்இப்படி பட்ட தண்டனைகளை கொண்டு வந்தால் எப்படி இருக்கும்????