Friday 15 January, 2010

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்!!!


ஒரு தலை காதல்இரு தலை காதல்பல முனை காதல், மாஸ் மசாலாபஞ்ச் டயலாக் , குத்து பாட்டு இதை எல்லாம்  எதிர்பாக்குறவங்க இந்த படத்தையும் ,  விமர்சனத்தையும் தவிர்ப்பது நல்லது.
படத்தின் தலைப்பு மட்டுமே நம்மூர் சினிமாக்கு பழகி போன ஒன்று. படத்தின் கதைகளம்   மிகவும் புதுமை. சொல்லப்பட்ட விதமும் புதுமை. இருப்பினும் படத்தின் பிற்பாதியில் சில இடங்கில் வெறுமை நம்மை வாட்டுகிறது.
ரீமா சென் - படம் முழுதும் வரும் "அனிதா பாண்டியன்" பட்டையை கிளப்பிருக்கிறார். நடிப்புநடனம்வீரம்கவர்ச்சி என அனைத்திலும் அசத்தியிருகிறார். தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். அதை  சரியாக பயன்படுத்தி கலக்கியிருக்கிறார்.
கார்த்தி - பருத்திவீரன் பிறகு சுமார் 2 வருடம் கழித்து கார்த்திக் நடிக்கும் திரைப்படம். படத்தில் முதல் பாதி கார்த்திக்கு தான் சொந்தம். மனுஷன் செம ஜாலியா நடிச்சிருக்கார். இவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கலாம். அவ்ளோ திறமை இருக்கு  "உன் மேல ஆசை தான்" பாட்டு ஒரு உதாரணம்.
பார்த்திபன் - இருண்டு போன ஒரு வம்சத்தின் ஒரு ராஜா. இந்த கதாபாத்திரத்திற்கு,பார்த்திபன் தவிர வேறு யார போடமுடியும்??? வழக்கமான நக்கல் பார்டியாக பார்த்த நம் பார்த்திபனை  இதில் எதிர்பார்க்காதீர்கள். இவரின் கதாபாத்திரம் பற்றி இத்தனை நாட்கள் மறைத்து வைத்ததும் நல்லதே. 
ரவீந்திரன் - இது மாதிரி ஒரு படம் இது வரைக்கும் யாரும் எடுத்ததில்லை , இனி டுப்பதும் கஷ்டம்!  அப்படி சொல்ற ஒரு படத்தை தந்த தயாரிப்பாளர் பெருமை உங்களுக்கு தான் சார் சேரும்!
செல்வராகவன் - காதல் கொண்டேன், 7G படத்துக்கு அப்புறம் புதுபேட்டை வந்தப்பவே இந்த பைய புதுசா யோசிக்க ஆரம்பிச்சுட்டர்னு புரிஞ்சது. அதை இந்த படத்துல நிரூபிச்சிட்டார் . இது வரைக்கும் யாரும் யோசிக்காத,சொல்ல படாத ஒரு கதைக்களம். படத்தோட 2nd half-la சில பல குறைகள் இருக்கு.. இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் படம் தமிழ் சினிமாவின் நிகரில்லா படம்னு பேறு வாங்கிருக்கும். படத்தில் வருவது போல்,இது வரை எவரும் கண்டிராத அந்த டத்தை பிடிச்சிருப்பார். அது கண்டிப்பா missing. இருந்தாலும்இப்படி ஒரு முயற்சி எடுத்த செல்வாவை  பாராட்டாமா இருக்க முடியாது. இந்த படம் மூலம் தன்னையும் நம்ம சினிமாவையும் உலக தரத்துக்கு கொண்டு போயிட்டார்!! 
ராம்ஜி - படத்தோட உயிர் இவர் தான். ஒளிப்பதிவாளர். இவர் எவ்ளோ கஷ்டபட்டார்னு படம் பாக்குறப்ப நமக்கு புரியும். பிரமிக்க வைக்குது. பின்னி எடுத்திருக்கிறார். கண்களுக்கு விருந்து தான்.
GV பிரகாஷ் தேவையான அளவு சை அமைத்திருகார்னு தான் சொல்ல முடியும் . இருந்தாலும் அவர் திறமைக்கு முடிந்த வரை நல்லாவே பன்னிருகார். யுவன் touching கண்டிப்பா missing. ஆண்ட்ரியா first  half வரைக்கும் தான். இருந்தாலும் பிஞ்சு முகம் கண்லயே நிக்குது! 
படத்தின் முதல் பாதி தான் பலமே. அது நம்மை அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற ஆவலை தூண்டுது.  "அதோ அந்த பறவை" பாடல் remix ஆகட்டும்,கார்த்தி ரீமாவிடம் வாங்கி   கட்டுவதும் சரிஇந்த ரெண்டு பொண்ணுங்ககிட்டையும் பண்ற சேட்டையும் சரி,  ஒரே அமர்க்களம் தான். குறிப்பா இடைவேளை அப்போ நம்மல மெய்சிலிர்க்க வைக்குது. அப்போ ரீமா காட்டுற அந்த சந்தோஷம் ஏன்னு படத்தோட பிற்பாதில தெரியும்.
Second half-la வசனங்களே ரொம்ப குறைவு. நிறைய நேரம் அமைதி தான். Gladiator போன்ற சண்டையின் ஆரம்ப காட்சிகள் அருமையா எடுத்திருக்காங்க. பார்த்திபன் நாட்டு மக்கள் இந்த ராணுவ வீரகளிடம் அனுபவிக்கிற சித்ரவர்த்தை கொடுமைடா சாமி. உண்மைலயே இப்படி தான் இருக்குமோ?? முதல் 10 நிமிடங்கள் பார்க்காமல் கிளைமாக்ஸ் பார்த்த படம் என்னடா டக்குனு முடிஞ்சிருஞ்சுனு தோணும். கிட்டத்தட்ட 2000 துணை நடிகர் நடிகைகள்.. எவ்வளோ பேரோட உழைப்பு!!!  
படத்தில் ஆங்காங்கே சில நெருடல்கள் ,  முகம் சுளிக்கிற காட்சிகள் ,  குறைகள் இருக்கு.  சிலர் கதறியும்  ஓடினார்கள். 
அதுனால என்ன??  
தமிழ் சினிமால இப்படி ஒரு படமோ,முயற்சியே கூட எடுக்கலையே..  
இனி வரதுக்கும் வாய்ப்புகள்  குறைவு தான்! அந்த முயற்சிக்கு என்  வாழ்த்துக்கள்!! 
ஆயிரத்தில் ஒரு படம் !!

12 comments:

  1. நல்ல பார்வை நண்பா .. இது போன்ற முயற்சிகள் கூட்டாக மேற்கொள்ளப்படவேண்டும் .

    ReplyDelete
  2. inikuthan unga valaipathivai parakaren. nala irukku, Vazhthukal.

    Valaratum.

    Anbudan
    Ramesh,tce

    ReplyDelete
  3. //இருந்தாலும் பிஞ்சு முகம் கண்லயே நிக்குது! //


    வேற ஒன்னும் இல்ல..வயசு கோளாறு,,,,
    எனக்கு ரீமா ரெண்டு நாள் நின்னாங்க...!!

    ReplyDelete
  4. //மீன்துள்ளியான் said...
    நல்ல பார்வை நண்பா .. இது போன்ற முயற்சிகள் கூட்டாக மேற்கொள்ளப்படவேண்டும் //

    ஆமா மீன்ஸ்.. இது போன்ற படத்துக்கு வழக்கம் போல நம்ம ஆதரவ கொடுப்போம்..

    ReplyDelete
  5. //Ramesh said...
    inikuthan unga valaipathivai parakaren. nala irukku, Vazhthukal.

    Valaratum.

    Anbudan
    Ramesh,tce//

    வருகைக்கும், பதிவிற்கும் நன்றி ரமேஷ்!!

    ReplyDelete
  6. //ஜெட்லி said...
    //இருந்தாலும் பிஞ்சு முகம் கண்லயே நிக்குது! //


    வேற ஒன்னும் இல்ல..வயசு கோளாறு,,,,
    எனக்கு ரீமா ரெண்டு நாள் நின்னாங்க...!! //
    நீங்க சொல்றது 100 % உண்மை!! நல்லா பாதிக்கபட்டாச்சு போலயே.. என்ன மாதிரி :)

    ReplyDelete
  7. Good one John! I really liked your blog and the initiative... and more than anythinge else, the 'tag line' in the home page

    ReplyDelete
  8. எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் படத்தோட விமர்சனம்....உங்களுடைய பகிர்வுக்கு நன்றி தோழரே...உங்களின் எழுத்துக்கள் தொடர
    என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. A great attempt by Selvaraghavan and Team... Good job done.
    - Muthukumar

    ReplyDelete
  10. Hi John,
    It is very nice about your comments on ஆயிரத்தில் ஒருவன். Keep Rocking man.

    By
    Thamizh.G

    ReplyDelete
  11. //பார்த்திபன் நாட்டு மக்கள் இந்த ராணுவ வீரகளிடம் அனுபவிக்கிற சித்ரவர்த்தை கொடுமைடா சாமி.//

    இந்திய அமைதி படையும் இலங்கை ராணுவமும் இலங்கை தமிழர்களுக்கு செய்த கொடுமையே சொல்ல பட்டு இருக்கிறது .. நம்ப வைத்து கழுதை அறுக்கும் அனிதா யாரு என்று நா சொல்லி தெரிய வேண்டியது இல்லை

    ReplyDelete
  12. ஆயிரத்தில் ஒரே படம் டா மச்சான் !!
    - Suthakar

    ReplyDelete