Saturday 5 June, 2010

தூக்கு தண்டனை கூண்டு!

சமீபத்தில் நண்பர்களுடன் ராமேஸ்வரம்கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். அப்பொழுதுபத்மநாபபுரம் அரண்மனை செல்ல நேரிட்டது! சுமார் 5.5 ஏக்கர் நிலபரப்பில் ஒரு பிரமாண்டம்! அதில் சுமார் 3.5 ஏக்கர் நிலபரப்பில் அரண்மனை கட்டிடங்களே இருந்தது அதன் இன்னொரு சிறப்பம்சம்! இப்படி மெய்சிலிர்த்த வேலையில் இன்னொரு தகவலை அறிந்து சற்று மிரண்டே போனேன்!

தூக்கு தண்டனை கூண்டு(Capital Punishment Cage): 

இந்த புகைப்படத்தை பார்த்தால் தூக்கு தண்டனையாஎன்று யோசிக்கலாம். ஆனால், அதன் பெயர் அப்படி தான் எழுதபட்டிருந்தது. விசாரித்த போதும் அதே பதில் தான்!

கொள்ளையர்கள்கயவர்கள்கொலையாளிகளை தண்டிக்க அன்றிருந்த மன்னரால் அமைக்கப்பட்ட கூடு தான் இது. இதன் மூலம் தண்டிக்கபடும் முறை மிகவும் கொடியது.

குற்றவாளிகளின் உடைகளை அவிழ்த்துஇந்த கூட்டில் இறுக்கி அடைக்கப்படுவார்கள். இந்த கூட்டை விட்டு வெளி வர முடியாத அளவுக்கு பூட்டுகளால் நன்கு அடைக்கபட்டிருக்கும்! இப்படி பூட்டிய குற்றவாளிகளை கள்வந்தட்டு என்னும் இடத்தில சென்று,மரங்களில் தொங்க விட்டு வந்துவிடுவார்கள்! 

அப்புறம் என்னபுழுகாக்கா முதல் அணைத்து விலங்குகளின் பசிக்கு இரையாக வேண்டியது தான்! இப்படி துடிக்க துடிக்க சித்ரவதை செய்து தண்டனையை நிறைவேற்றுவார்கள்!


இன்றைய சூழலில்இப்படி பட்ட தண்டனைகளை கொண்டு வந்தால் எப்படி இருக்கும்????

13 comments:

  1. Uhm... Appadiya

    ReplyDelete
  2. scary, john... நம்மூர்ல கூட அந்தக் காலத்தில இப்படிப் பண்ணியிருக்காய்ங்களா... :(

    ReplyDelete
  3. அன்பின் ஜான் கார்த்திக் - அக்கால கட்டத்தில் தேவையான ஒன்றொ என்னவோ ??? ம்ம்ம் -

    ReplyDelete
  4. அட.. நம்ம பப்பநாரம் கொட்டாரம்.எப்போ ஊருக்கு போனாலும் விசிட் அடிக்கிறதுண்டு.அப்றம் அந்த கூண்டை தொங்கவிடற ஊருக்கு பேரு கழுவன்திட்டு.

    ReplyDelete
  5. கண்டிப்பா இந்த முறை இப்பொழுது இருக்க வேண்டும்,...

    ReplyDelete
  6. //LK said...
    much needed for todays time//

    நல்லா சொன்னீங்க..

    ReplyDelete
  7. //EverGreenLife said...
    nalla than irukkum.//

    நல்லா தான் இருக்கும்..

    //Ahambrammasmi said...
    Uhm... Appadiya//

    ஹ்ம்ம். அப்படி தான்!

    //ADAM said...
    too much//

    என்ன செய்ய...

    //ப்ரியமுடன்...வசந்த் said...
    கண்டிப்பா இந்த முறை இப்பொழுது இருக்க வேண்டும்,...//

    அடியேனின் கருத்தும் அதே!!

    //
    Thekkikattan|தெகா said...
    scary, john... நம்மூர்ல கூட அந்தக் காலத்தில இப்படிப் பண்ணியிருக்காய்ங்களா... :( //

    இதை முதலில் கேட்டப்போ எனக்கும் அப்படி தான் தோணிற்று!

    //cheena (சீனா) said...
    அன்பின் ஜான் கார்த்திக் - அக்கால கட்டத்தில் தேவையான ஒன்றொ என்னவோ ??? ம்ம்ம் //

    சீனா, அந்த காலத்துக்கு மட்டும் இல்ல, இப்போ வெச்சா கூட நல்ல இருக்கும்ல... :)

    ReplyDelete
  8. //அமைதிச்சாரல் said...
    அட.. நம்ம பப்பநாரம் கொட்டாரம்.எப்போ ஊருக்கு போனாலும் விசிட் அடிக்கிறதுண்டு.அப்றம் அந்த கூண்டை தொங்கவிடற ஊருக்கு பேரு கழுவன்திட்டு//

    ஒஹ்.. இது பேறு பப்பனாரம் கொட்டாரமா... எனக்கு அவங்க இத சொல்லவே இல்ல :( மேலும் பல தகவலை தந்த சாரலுக்கு நன்றி :)

    ReplyDelete
  9. இப்படி மெய்சிலிர்த்த வேலையில்

    ???

    What is this?? Un tamil aarvam puriyuthu.. Athukaga ipdi spelling mistakoda eludha koodathu.. :)

    ReplyDelete
  10. mihavum rasithu padithen. வலைப்பதிவு nandraha irukirathu.

    ReplyDelete