Friday 5 March, 2010

சார் தபால்!!

சூர்யா, வீட்டின் கடைக்குட்டி. அப்போது மூன்றாம் வகுப்பு பயின்று வந்தான். பெற்றோர் இருவரும் அரசு பணியில் இருப்பவர்கள். அவன் அண்ணன், அக்கா படிப்பு தொடர்பாக நிறைய தபால்களும் வரும். எனவே, அவர்கள் வீட்டில் கடித தொடர்புகள் அதிகம் இருக்கும். நம்ம சூர்யாவிற்கும் வரும்; வருட இறுதியில் பள்ளி கட்டணம் மற்றும் தேர்வு முடிவுகள் போன்ற கடிதங்கள். அதுவும் அவன் அப்பா பெயர் போட்டு தான் வரும். சூர்யா அக்கா செல்லம். பாடம் சொல்லி தருவது எல்லாம் அக்கா தான்!

நாளடைவில், சூர்யா தனக்கு கடிதமே வருவதில்லை என்ற ஏக்கம் அவனை புரட்டிபோட்டது. இதனால், தனக்கு வீட்டில் மரியாதை குறைந்து விட்டது என்று எண்ண ஆரம்பித்தான்.

இப்படி நாட்கள் சென்று கொண்டே இருக்க, ஒரு சனிக்கிழமை காலை 11 மணி அளவில், வீட்டில் அனைவரும் இருக்கும் நேரம் பார்த்து,

"சார் தபால்" என்று குரல் ஒலிக்க, சூர்யா அப்பா விரைந்தார்!

"சார், சூர்யா என்ற பேருக்கு ஒரு கடுதாசி வந்திருக்கு, அவர கொஞ்சம் கூப்பிடறீங்களா?" என்றார் தபால்காரர்.

"எங்க இருந்து? ஸ்கூல்-ல இருந்தா பா?" என்று கேட்க , "இல்ல சார், இது வேற ஏதோ தபால்" என்றார். வீட்டில் அனைவரின் கவனமும் சட்டென்று சூர்யா மீது திரும்பியது!

அப்பா, "டே சூர்யா, உனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்கு டா, கொஞ்சம் வாயேன்" என்றார்.

முதல் குரலுக்கு வரவில்லை. மீண்டும் அம்மா கூப்பிட்டவுடன் வீர நடை போட்டு வந்தான் சூர்யா!

"என்ன பா, எனக்கா லெட்டர் வந்திருக்கு?" என்றான் ஆச்சர்யமாக , "ஆமாம் டா" அப்பா சொன்னார்.

                                              
 அவன் முகத்தில் ஏதோ சாதித்துவிட்டது போல் ஒரு கர்வம், பெருமை எல்லாம் சேர்ந்து இருந்தது!! தபால்காரர், கடிதத்தை தர, பெரும் புன்னகையோடு வாங்கினான். வீட்டில் அனைவரின் கவனமும் தன் மீது தான் என்று நினைத்து, கம்பீரமாக நடக்க ஆரம்பித்தான்.

"டே, யாருடா உனக்கு லெட்டர் போட்டது?" அப்பாவிடம் இருந்து குரல் வர, "என் friend பா" என்று விருடென்று கிளம்பி தனது அறையை நோக்கி விரைந்தான்!

திடீரென்று யாரோ தடுப்பதை உணர்ந்து, நிமிர்ந்து பார்த்தால் அக்கா. "யாரு டா அது உனக்கு லெட்டர் போடுறது? எங்க கொடு பாப்போம்" என அந்த கடிதத்தை வாங்கினாள். சூர்யாவை பார்த்து "ஏன் டா இப்படி எல்லாம் செய்யுற, உனக்கு யாரு இதெல்லாம் சொல்லி தந்தா?" என்று சொல்ல ஒன்னுமே தெரியாததை போல நின்றான். கடிதத்தில் இருந்த கையெழுத்து தன்னுடையது தான் என்பதை அக்கா கண்டு பிடித்துவிட்டால் என்பதை உணர்ந்தான். வீட்டில் அனைவரும் இவனது சேட்டையை பார்த்து "கொல்" என சிரித்தனர். சூர்யா மட்டும் நினைத்துக்கொண்டான் "அடுத்த முறை லெட்டர் எழுதுறப்போ, friend -a எழுத சொல்லணும்!!

இன்றைக்கும் சூர்யா வீட்டில் இருக்கும் பொது தபால் வந்தால், ஒரு கேலி பார்வை சூர்யா மீது இருக்கும்.

குறிப்பு :  இது கற்பனை கதை அல்ல,என் நண்பன் ஒருவன் சிறுவயதில் செய்த சேட்டை. பெயர் மட்டும் மாற்றிவிட்டேன். இன்றைக்கும் இது போன்ற சித்து விளையாட்டு செய்து கொண்டு தான் இருக்கிறான்.


தொடரும்..

5 comments:

  1. Antha paiyan nee thaana ?

    ReplyDelete
  2. Gud..story..john...but more essence needed....cld have drag it more... :)

    ReplyDelete
  3. harishankar said... /Antha paiyan nee thaana ?//
    நான் அவன் இல்லை.

    ReplyDelete
  4. //பிரியமுடன்...வசந்த் said...
    ஹா ஹா ஹா //
    நன்றி வசந்த்!

    //jana said...
    Gud..story..john...but more essence needed....cld have drag it more... :)//
    essensce-na lemon flavour potruvoma??? :) en adutha kadhaigalil nitchayam irukkum!! nandri KK

    ReplyDelete