Monday 1 March, 2010

விண்ணை தாண்டி வருவாயா - என் பார்வையில்!



AR ரஹ்மான் இசை, சிம்பு - த்ரிஷா ஜோடி. ரொம்ப நாள் கழித்து தமிழில் ஒரு மென்மையான காதல் படம் என்று எதிர்பாத்து போனேன் (சிம்பு படம்னு ஒரு பயம் இருந்தது :) )


கண்டதும் ஹீரோயின் மேல ஹீரோக்கு காதல், அண்ணன் சண்டைக்கு வருவான், அப்புறம் வீட்ல தெரியும், ஹீரோயின்க்கு கல்யாணம் நிச்சயம் பண்ணுவாங்க, கல்யாணம் வரைக்கும் போகும், நின்னுரும், திரும்ப காதல் இப்படின்னு ரொம்ப புதுமையா இருக்க கதையை எப்படி தான் இயக்குனர் தேடி கண்டுபிடிச்சார்னு தெரியலை. ஹீரோக்கு பெரிய இயக்குனர் ஆகணும்னு ஆசை, லட்சியம். அப்படியே படம் முடியும் போது வெற்றிபடத்தோட இயக்குனரா வராரு (அதுவும் இதே கதையை வெச்சு!!))


சிம்பு தன்னோட வழக்கமா பாணில இருந்து நடிப்பது  எவ்ளோ கஷ்டம். அந்த விஷயத்தை இங்க ரொம்ப நல்லாவே பன்னிருகார். த்ரிஷா பார்க்க அழகா இருக்காங்க. நல்லாவும் நடிச்சிருக்காங்க. படத்தின் முதல் பாதியில் வரும் மூன்று பாடல்களை எடுத்த விதம் உண்மைலயே பிரமிக்க வைத்தது! சும்மா பின்னி எடுத்திருக்காங்க. மனோஜ் கேமரா புகுந்து விளையாடிருக்கு. 


சில இடங்களில் வசனங்கள், கணேஷின் நடிப்பு நல்லா இருக்கு (குறிப்பா Worth -ஆ இல்லையா?? ) .




படத்துல நம்ம ரசிக்க வைக்கிற விஷயம் AR ரஹ்மான் இசை. "ஹோசான", "ஓமான பெண்ணே" எல்லாம் சும்மா ஜில்லுனு இருக்கு. இந்த ஜில் மட்டும் இல்லேன்னா எப்பவோ தியேட்டர் விட்டு தெரிச்சு ஓடிருப்பேன்.


உதாரணதுக்கு, சிம்பு சொல்ற ஒரு வசனம், "நான் ஒரு பெரிய பாக்ஸர், என்னோட இந்த அடிலயே உங்களுக்கு அது தெரியும்". இது மாதிரி பல இடங்களில் ஏன் எதுக்கு வருதுனே தெரியாது. இதையும் தாண்டி படத்துல எதாச்சும் இருக்கும்னு நெனைச்சா, நெனச்சுக்க வேண்டியது தான்.  அதை படம் முடியுறப்ப நமக்கே தெள்ள தெளிவா புரியும்.


கிளைமாக்ஸ்-ல நமக்கு ஒரு திருப்பம் வேற.. அவர் இயக்குர படத்துக்கு எப்படியோ கஷ்ட பட்டு எங்கயோ இருக்க ஹீரோயின படம் பார்க்க வர வைப்பார். அது எப்படின்னு த்ரிஷா கேப்பாங்க.. அதுக்கு நான் எடுக்குற அடுத்த படத்தை பாரு புரியும்னு சொல்லுவார் சிம்பு. (அய்யயோ, என்னது மறுபடியும் முதல்ல இருந்தா!!!))


காதலர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்னு சொன்னான். லவ் சப்ஜெக்ட் - அப்படின்னு. நான் திரும்ப கேட்டேன். அலைபாயுதே, இதயம், காதல் வைரஸ் மாதிரி படங்கள் கூட அப்படி தான் ஆனா அது எப்படி நமக்கு பிடிச்சதுன்னு.. அவன் கிட்ட பதில் இல்ல..


காதல் திரைப்படம்.. எவ்ளோ உணர்வுகள், உருக்கங்கள் இருக்கணும். கதைக்களம் தமிழ் சினிமாக்கு ரொம்ப புதுசு (?!@??!!).. அதனாலையோ என்னவோ எனக்கு படம் பாக்குறப்ப லவ் பீல் வராம கடுப்பு பீல் தான் வந்தது.


கதை தான் படத்துல பெருசா இல்ல, திரைக்கதை நல்லா பண்ணிருக்கலாம் ? இயக்குனர் ஹீரோயின் அண்ணனுக்கு பின்னணி குரல் கொடுப்பதிலே கவனம் செலுத்திடார் போல..
அதானால தான் என்னவோ இரண்டாம் பாதில எவ்ளோ பேர் வந்து தள்ளினாலும் படம் நகர மாட்டேங்குது..


வேண்டுகோள்கள் :
இயக்குனருக்கு : சுப்பிரமணியபுரம் படத்தை விமர்சனம் செய்றதுக்கு முன்னாடி உங்க படம் எப்படின்னு பாருங்க..
AR ரஹ்மான் : உங்களோட உழைப்பை இது மாதிரி படத்துக்கு வீணாக்காதீங்க..


சிம்பு : உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்?
பொதுமக்கள் (நான்) : ஊர்ல எவ்ளோ படங்கள் ஓடுது .. மாமா நாம ஏன் இந்த படத்துக்கு வந்தோம்?
மாமா (நண்பன்): அது நம்ம தலைஎழுத்து !!

10 comments:

  1. விமர்சனம் பார்த்தது
    படம் பார்த்த மாதிரி இருக்கு
    நன்றி

    ReplyDelete
  2. இசைக்காக‌த்தான் நானும் ஒரு த‌ட‌வை, ஒரே ஒரு த‌ட‌வை பாக்கலாம்னு இருக்கேன்

    ReplyDelete
  3. //ஊர்ல எவ்ளோ படங்கள் ஓடுது .. மாமா நாம ஏன் இந்த படத்துக்கு வந்தோம்?
    //

    நல்ல கேள்வி ஜான்...

    ReplyDelete
  4. hey karthi,to be honest with you i too lost my 3hrs sitting in front of laptop and watching this
    movie.... bcoz till the end i was trying to find what is the story anyway you said everything very nicely....songs really very nice and i liked some scenes too ....i wanted different story i mean love story but :( keep it up...

    ReplyDelete
  5. SUPER APPU, KALAKITINGA POONGA,

    ENNAKU 15S$ WASTE AYEDUCHI NAMBA

    ReplyDelete
  6. naan innam padam pakalai -- but your way of narration is cool baby -- keep doing

    ReplyDelete
  7. nanba unnoda review la negative point and positive points rendum kalandhu varuthunala oru thelivu illama iruku. Next time first positive comments then negative comments thani thaniya ezhuthu - gummunu irukum

    ReplyDelete
  8. நி கே, ரகு, ஜெட்லி, ஜெரி, அண்ணி, சுதேஷ், VR , சந்தோஷ் - தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  9. Me 2 had the same feelings expressed here...watching the movie....if it have been some one else instead of simbhu....may b the feel could have been better in watching the movie...anyhow nice writing john... :)

    ReplyDelete